Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

5 டன் ரேஷன் அரிசி வாணிப கிடங்கில் ஒப்படைப்பு :

ஜோலார்பேட்டை/பேரணாம்பட்டு: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 1-வது நடைமேடை அருகே ரயிலில் கடத்துவதற்காக 45 மூட்டைகளில் சுமார் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, பேரணாம்பட்டு வருவாய்த் துறையினர் மசிகம் கூட்டுச்சாலை யில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு கேட்பாரின்றி கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்து, அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x