Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

திருப்பத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம், திருப்பத்தூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கொரட்டி, கந்திலி, திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு மற்றும் வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 4-ம் தேதி (இன்று) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சி.கே.ஆசிரமம், பொம்மிக்குப்பம், திருப்பத்தூர் நகரப்பகுதி, குரிசிலாப்பட்டு, கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், காலேஜ் பகுதி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், ஆண்டியப்பனூர், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதுபுரம், செட்டேரி டேம் பகுதி, சுண்ணாம்புக்குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x