Published : 03 Mar 2021 03:21 AM
Last Updated : 03 Mar 2021 03:21 AM
மும்பை ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறும்போது, “மும்பை சத்ரபதி சிவாஜிரயில் நிலையம், தாதர் மற்றும் லோகமான்ய திலகர் ரயில் நிலையங்களிலும் மும்பை ஒட்டியுள்ள தானே, கல்யான், பான்வெல், பிவண்டி ரோடு ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூன் 15 வரை அமலில் இருக்கும். ரயில் நிலையங்களில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கவேகட்டண உயர்வு முடிவு எடுக்கப்பட் டுள்ளது” என்றார்.
மும்பையில் தினசரி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை பிப்ரவரி 2-வது வாரம் முதல் அதிகரிக்கத் தொடங்கியது. மும்பையில் இதுவரை 3.25 லட்சத்துக்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT