Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM
அதிமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விரும்பி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல், மார்ச் 4-ம் தேதி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல், கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள், தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி, மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங்கள், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், புதுக்கோட்டை வடக்கு,தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர்,புறநகர், நீலகிரி, கோவை மாநகர், பறநகர் வடக்கு, தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, மேற்கு, சேலம் மாநகர், புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணி முதல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, தெற்கு, வேலூர் மாநகர், புறநகர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, மத்தியம், மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழககு, மேற்கு, வடசென்னை வடக்கு கிழக்கு, மேற்கு, வடசென்னை தெற்கு கிழக்கு, மேற்கு, தென்சென்னை வடக்கு கிழக்கு, மேற்கு, தென்சென்னை தெற்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் தவிர புதுச்சேரி, கேரள மாநிலங்களில் இருந்து விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
இந்த நேர்காணலில் தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவர்ம் அறிய தங்களுக்காக விண்ணப்பித்தவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அதிமுக தலைமை கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT