Published : 03 Mar 2021 03:25 AM
Last Updated : 03 Mar 2021 03:25 AM
ஓசூரில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றது.
ஓசூர் கூடைப்பந்து சங்கம் சார்பில் 7-ம் ஆண்டு மாநில அளவிலான பகலிரவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி நடந்தது. ஓசூர் காமராஜ் காலனி ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில், மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட மாநிலம் முழுவதும் இருந்து 27 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப்போட்டியில் மதுரை மற்றும் சேலம் அணிகள் மோதின. இதில் மதுரை அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற மதுரை அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக சேலம் அணிக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ஓசூர் எம்எல்ஏ சத்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து அணி வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT