Published : 03 Mar 2021 03:26 AM
Last Updated : 03 Mar 2021 03:26 AM
நீதிமன்ற உத்தரவின்படி தினக் கூலித் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் தொழிலாளர்கள் (சிஐ டியூ) நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித் தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மா.பால சுப்பிரமணியம், பொருளாளர் பாண்டி, முன்னாள் மாவட்டத் தலைவர் விஜயன் உட்பட 200-க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சங்கத்தின் நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத் தினார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடிந்த பிறகு கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT