Published : 03 Mar 2021 03:27 AM
Last Updated : 03 Mar 2021 03:27 AM

வாக்களிக்க விழிப்புணர்வு

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்த செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் முத்துகழுவன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x