Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM
கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இம்முறை 11 அணிகள் கலந்துகொண்டு விளையாடிய நிலையில் தற்போது லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை, ஏடிகே மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு, கோவா ஆகிய 4 அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அரை இறுதி சுற்று வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.
40 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை அணி தனது முதற்கட்ட அரை இறுதி சுற்றில் கோவா அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 5-ம் தேதி பதோர்தாவில் உள்ள பிஜேஎன் மைதானத்தில் நடைபெறுகிறது. கோவா அணி லீக் சுற்றில் 20 ஆட்டங்களில் 7 வெற்றி, 10 டிரா 3 தோல்விகளுடன் 31 புள்ளிகள் பெற்றிருந்தது.
இந்த இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட அரை இறுதியில் 8-ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை நடத்தும். இந்த ஆட்டம் பம்போலிமில் உள்ள ஜிஎம்சி மைதானதில் நடத்தப்படுகிறது. இந்த இரு ஆட்டத்திலும் அடிக்கப்படும் கோல்களின் சராசரி விகிதப்படி வெற்றி பெறும் அணி இறுதி சுற்றில் கால்பதிக்கும். சாம்பியன் கோப்பையை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதி சுற்று வரும் 13-ம் தேதி பதோர்தாவில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT