Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
தனியார் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், அன்றைய தினமே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களில் கடந்தமாதம் 26-ம் தேதி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அன்றைய தினமே ஓய்வூதியம் பெறுவதற் கான ஆணை வழங்கப்பட்டது.
சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 (ஓய்வூதியம்) டாக்டர் சுதிர் குமார் ஜெய்ஸ்வால் இதற்கான ஆணையை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை தெற்கு, வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் பி.சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை வடக்கு மற்றும் தெற்கு பகுதிக்கான மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 ரிதுராஜ் மேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT