Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

ஜெர்மனி பல்கலை.யில் மூடப்படும் நிலையில் உள்ள தமிழியல் நிறுவனத்துக்கு ரூ.1.24 கோடி வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை

'ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல் மூட முடிவு - தமிழக அரசு உறுதி அளித்தபடி நிதி வழங்கப்படாததால் சிக்கல்?' என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம்மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மிகத் தொன்மையான தமிழ் மொழியைக் கற்று,அதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, ஜெர்மனி தமிழ் அறிஞர்க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் என்பவரால் 1963-ல் இந்த ஆய்வு நிறுவனம்ஆரம்பிக்கப்பட்டது. இங்கு முனைவர் பட்டத்துக்கு 5 படிப்புகளும், தமிழில் இளங்கலை படிப்பும் உள்ளது. ஆய்வு நிறுவன நூலகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நூல்கள், ஓலைச் சுவடிகள் இருப்பது தனிச் சிறப்பு.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் மூடப்படுகிறது என்று முன்பு வெளிவந்த செய்தியை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ரூ.1.24 கோடி வழங்கப்படும் என்று 2019-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவலால் இந்த நிதி வழங்கப்படவில்லை. அதிமுக அரசின் அலட்சியத்தால், மார்ச் 31-ம் தேதியுடன் அந்த ஆய்வுநிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டின் பெருமைக்கு தக்க சின்னமாக உள்ள இந்த ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட ஏதுவாக கொலோன் பல்கலைக்கழக தமிழ்ஆய்வு நிறுவனத்துக்கு ரூ.1.24 கோடியை அதிமுக அரசு அனுப்பவேண்டும். இந்த நிதி அந்த பல்கலைக்கழகத்துக்கு சென்றடைய மத்திய அரசு விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x