Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது. அங்கு ஆளும் பாஜக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் கையேடுகள் வீடு வீடாக சென்று வழங்கப்படுகின்றன. இதற்காக 5 நாடகக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ் வொரு குழுவிலும் 10 நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அசாமின் புகழ்பெற்ற நடிகர் ஜதின் போரா கூறும்போது, “நாடகக் குழுவினர் தெருத்தெருவாக சென்று அரசின் சாதனைகளை நாடகங்கள் மூலம் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர். பொழுது போக்கு அம்சமான நாடகங்கள் மூலம் ஒரு கருத்தை எடுத்துக் கூறுவது சுலபமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை சமூக ஊடகங்கள் மூலம் சென்றடைய முடியும். அதேநேரம் நவீன தொழில்நுட்பங்களை அறிந்திராத மக்களைச் சென்றடைய நாடகங் கள் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT