Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

போலி டாலரை மாற்ற முயன்ற இளைஞரிடம் விசாரணை

கோவையில் போலி டாலர் நோட்டுகளை மாற்ற முயன்ற நைஜீரியா இளைஞரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை காந்திபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமெரிக்க டாலரை கொடுத்து, இந்திய ரூபாயை வாங்க வந்தார். அவர் கொண்டு வந்த ரூ.1,500 மதிப்புள்ள அமெரிக்க டாலரை, நிதிநிறுவன ஊழியர் பாலச்சந்திரன் வாங்கிப் பார்த்தபோது, அது போலியான டாலர் நோட்டு எனத் தெரியவந்தது.

இதையடுத்து நிதிநிறுவன ஊழியர்கள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காட்டூர் போலீஸார், தொகையை மாற்ற வந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இக்சுக்கூ எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x