Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

தனியார் பேருந்து - ஜீப் மோதி விபத்து கேரள மாநில இளைஞர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து, கோவை நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

சேவூர் - அவிநாசி சாலை கருமாபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர், வலது பக்கமாக பேருந்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது.

எதிர்பாராதவிதமாக, எதிரே அவிநாசியில் இருந்து சேவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஜீப் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. ஜீப்பின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. ஜீப்பில் வந்த இருவர், பேருந்தில் ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர்.

இதில் அவிநாசி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஜீப் ஓட்டுநரான கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த பசீர் என்பவரின் மகன் முகமது ஷாஹீர் (29), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த ஜலில் (28),கோவை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x