Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவர்கள் கைது

திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக் கப்பட்டனர்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (22). இவர், கடந்த 27- ம் தேதிதனது இருசக்கர வாகனத்தை அவிநாசி செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள் ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து, அளித்த புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்நிலை யில், 17 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களை பிடித்து விசாரித்தபோது, இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். சிறுவர்களை கைது செய்த போலீஸார், பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x