Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

பெயின்டிங் தொழிலாளி கொலை வழக்கில் உறவினர் கைது

திருப்பூர்

பல்லடம் அருகே பெயின்டிங் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பாளையப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த மல்லேஸ்வரன் (43), பல்லடம் சின்னூர் அருகே தனியார் நிறுவன கட்டிடத்தில் தங்கி பெயின்டிங் வேலை செய்து வந்தார். அவரது உறவினரான விருதுநகரை சேர்ந்த வழிவிட்ட அய்யனார் (41) என்பவருடன், கடந்த 27-ம் தேதி பல்லடம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகேயுள்ள மது கூடத்தில் அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவில், வழிவிட்ட அய்யனார் இரும்பு கம்பியால் மல்லேஸ்வரனின் தலையில் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் கொலை வழக்கு பதிந்து வழிவிட்ட அய்யனாரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x