Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

இலவசமாக பெட்ரோல் வழங்கல்தேர்தல் அலுவலர் விசாரணை

சேலம்: சேலம் ஆட்டையாம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கியது தொடர்பாக தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் ஆட்டையாம்பட்டியில் பேரூர் திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. விழாவில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, பேரூர் செயலாளர் முருகபிரகாஷ் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் 250 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் திமுகவினர் பெட்ரோல் இலவசமாக வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பண்டறிநாதன் கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பரிசுப் பொருட்கள், பணம் மக்களுக்கு வழங்குவது தேர்தல் விதிமுறை மீறிய செயல். ஆட்டையாம்பட்டி பகுதியில் திமுக-வினர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், இலவசமாக பெட்ரோல் விநியோகம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x