Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

சேலம் மாநகர போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கு தொப்பி வழங்கல்

சேலம்: சேலம் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் 130 போலீஸாருக்கு வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள சோலார் தொப்பி வழங்கப்பட்டது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெயிலில் போக்குவரத்து பிரிவு போலீஸார் சாலைகளில் நின்று போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து அவர்களை பாதுகாக்க சோலார் அட்டையிலான தொப்பி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காலை, மதிய வேளைகளில் போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மற்றும் மோர் வழங்கப்படுகிறது. சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த நிகழ்ச்சியில் மாநகர் காவல் துறை துணை ஆணையர் செந்தில் தலைமையில் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி, போக்குவரத்து பிரிவு போலீஸார் 130 பேருக்கு சோலார் தொப்பியை வழங்கினார். மேலும், நிழற்குடை இல்லாத சாலை சந்திப்புகளில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x