Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
மதுரை எம்.சத்திரப்பட்டி அருகிலுள்ள மந்திக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் முத்துக்குமார் (13). 7-ம் வகுப்பு படித்தார். கடந்த 24-ம் தேதி மந்திக்குளம் சந்திப்புப் பகுதிக்குச் சென்றார். அங்கு தென்னை மரத்தில் கூட்டில் இருந்த கிளி குஞ்சை பிடிக்க மரத்தில் ஏறியபோது எதிர்பாராது கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT