Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டப்பட்டது.

கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தார். சுய நிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். துறைகளுக்கு இடையேயான விநாடி-வினா மற்றும் குறும்பட போட்டிகள் நடைபெற்றன. குறும்படப் போட்டியில் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் முதல் பரிசும், வணிகவியல் தொழில் முறை கணக்கியல் துறை மாணவர்கள் 2-ம் பரிசும், கணினி அறிவியல் துறை மாணவர்கள் 3-ம் பரிசும் பெற்றனர்.

விநாடி-வினா போட்டியில் முதல் பரிசை கணினி அறிவியல் துறை மாணவர்கள் ராஜா, விஜய அரவிந்தன் ஆகியோர் பெற்றனர். 2, 3-ம் பரிசுகளை புள்ளியியல் துறை மாணவர்கள் அஸ்வத், நாராயணன், அஸ்வினி மற்றும் ரம்யா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் இயக்குநர் பரிசுகளை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x