Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

மனுக்களை பெட்டியில் செலுத்திய மக்கள்

திருச்சி: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெறவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களைச் செலுத்துவதற்கு ஆட்சியர் அலுவலகம் முன் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதன்படி, நேற்று பலர் தங்களது கோரிக்கை மனுக்களை இந்தப் பெட்டியில் இட்டுச் சென்றனர்.

இதனிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அட்டைப் பெட்டியுடன் வந்த திருவெறும்பூர் ஜி.கே.மூப்பனார் நகர் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.செல்லதுரையை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தங்கள் பகுதி மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு இதுவரை அளித்த 1,200 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கவுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து, போலீஸார் அவரை ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது, தேர்தலுக்குப் பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததாக செல்லதுரை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x