Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

காங். சார்பில் குமரியில் போட்டியிட விருப்ப மனு

காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், “சட்டப்பேரவைத் தேர்தலோடு நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பு பவர்கள் மார்ச் 1 (இன்று) முதல் 5-ம் தேதி வரை சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு அளிக்கலாம். ரூ.500 செலுத்தி விருப்ப மனு பெற்று, ரூ. 25 ஆயிரம் நன்கொடையை வரைவோலை மூலம் செலுத்தி நேரில் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை ஆகியவற்றின் நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x