Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

புதுச்சேரியில் 97.85 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 8 பேருக்கு கரோனா

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 8 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்டுள்ள தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 1,438 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 6, காரைக்காலில் 1, மாஹேவில் 1 என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

நேற்று உயிரி ழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 668 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,725 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவ மனைகளில் 95 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 90 பேரும் என 185 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண் ணிக்கை 38,872 (97.85 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6 லட்சத்து 29 ஆயிரத்து 389 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 151 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x