Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தயாளன் மனைவி அஞ்சாலாட்சி (50). கணவர் இறந்ததால் மகனுடன் வசித்து வந்த அஞ்சாலாட்சி அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் பெரிய காலாப்பட்டு தேசிய வங்கி எதிரே கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே கோட்டக்குப்பம் அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் அசோக் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். திடீரென அவரது பைக் சாலையை கடக்க முயன்ற அஞ்சாலாட்சி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஞ்சாலாட்சிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x