Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

கோவில்பட்டி-கடம்பூர் பாதையில் அதிவேக ரயில் சோதனை

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டை அகல ரயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. தெற்கு சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்தார். கோவில்பட்டியில் இருந்து மாலை 5.02 மணிக்கு புறப்பட்ட ரயில் 17.42 கி.மீ தூரத்தை 23 நிமிடங்களில் கடந்து கடம்பூருக்கு மாலை 5.25 மணிக்கு வந்து சேர்ந்தது. இத்தகவலை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x