Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

செட்டியார் சமூக வேட்பாளர்களுக்கு கட்சி வேறுபாடின்றி தேர்தல் பணிபேரவை நிறுவனத் தலைவர் அறிவிப்பு

செட்டியார் சமூக வேட்பாளர்களுக்கு கட்சிப் பாகுபாடின்றி தேர்தல் வேலை செய்வோம் என்று அனைத்திந்திய செட்டியார் கள் பேரவை நிறுவனத் தலைவர் புகழேந்தி தெரிவித்தார்.

அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மதுரை பசுமலையில் நேற்று நடைபெற்றது. பேரவை நிறுவனத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார். மங்கலதேவி கண்ணகிக்கு லோயர்கேம்ப்பில் மணி மண்டபத்துடன் கூடிய சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவுக்கு தேசிய செட்டியார் பேரவை ஆதரவு என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய ஒரே கொள்கை செட்டியார் சமூக வேட்பாளர்கள் எந்தெந்தத் தொகுதிகளில் நிற்கிறார்களோ அங்கு கட்சிப் பாகுபாடின்றி தேர்தல் வேலை செய்து வெற்றிபெற வைப்பதே என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x