Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கூடலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் மூன்றாவது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர் மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சுனில் தலைமை வகித்தார். 2019-ம் ஆண்டு பதவி உயர்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பணி விடுப்பு ஆணை வழங்காததைக் கண்டித்தும், உடனே வழங்கவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் சத்தியநேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x