Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: டீசல் விலையைக் குறைக்கக்கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு லாரி உரிமையாளர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து, டீசல் விலையைக் குறைக்க வேண்டும். டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். லாரி உரிமையாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். லாரிகளுக்கு கரோனா காலத்திற்கான காலாண்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். லாரிகளுக்கு ஆன்லைன் முறையில் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் வாங்கிலி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், உதவித் தலைவர் சுப்புரத்தினம், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் ராஜா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x