Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

அரசு கட்டிடங்களில் உள்ள கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற ஆணையர் உத்தரவு

சென்னை

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக, அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் பேனர்கள், கட்சிக் கொடிகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும்.

அதேபோல், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள, வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x