Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

அரசு மருத்துவமனையில் இறந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு

அருப்புக்கோட்டை அரசு மருத் துவமனையில் டான்சில் அறுவை சிகிச்சைக்கு பிறகு கோமாவுக்கு சென்று இறந்த 8 வயது சிறு மியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகள் சங்கீதாவை(8), டான் சில் அறுவைச் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 16.4.2016-ல் சேர்த்தோம். அறுவைச் சிகிச்சை நடந்த பின் சிறிது நேரத்தில் என் மகள் மயக்க நிலைக்குச் சென்றார். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தோம்.

தொடர்ந்து 83 நாட்கள் கோமாவில் இருந்த சங்கீதா 5.7.2016-ல் இறந்தார். அறுவை சிகிச்சையின்போது அதிக அளவில் மயக்க மருந்து தரப்பட்டதால் என் மகள் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்துள்ளார். இதனால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனு தாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், டான்சில் அறுவைச் சிகிச்சைக்காக சிறுமி சேர்க்கப்பட் டுள்ளார். அவருக்கு வேறு உடல் நலப் பிரச்சினை இல்லை. அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிந்து கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்துள்ளார். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண் டும். இதனால் மனுதாரருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x