Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
வேலூர்: வேலூரில் மகளிர் காவல் நிலையம் முன்பாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் சலவன்பேட்டை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சங்கீதா (30). இவர், வேலூர் அண்ணா சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையம் முன்பாக நேற்று காலை குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அங்கு திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற காவலர்கள் அவரை சமாதானம் செய்து விசாரித்தனர்.
அதில், ‘‘எனக்கும் காகிதப்பட்டறையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (35) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சத்தியமூர்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் கூடா நட்பு ஏற்பட்டு தனியாக குடும்பம் நடத்தி வருகிறார். அவரை, மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, சங்கீதாவின் புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT