Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

மார்ச் 1 வரை வறண்ட வானிலை நிலவும்

சென்னை

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மார்ச் 1-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில். “தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பிப்.26 (இன்று) முதல் மார்ச் 1-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 71 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x