Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

திரைமறைவில் காய் நகர்த்திய அஜித் தோவல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தனி ஆலோசகர் முகமது யூசுப்புடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மட்டுமே இந்த பேச்சுவார்த்தை பற்றி தெரியும் என ‘ரா' உளவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட தொடங்கிய பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயான அணுகுமுறையில் சில மாற்றங்கள் தென்படுவதை கவனிக்க முடிந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

உதாராணமாக, பாகிஸ்தான் ராணுவம் சார்பில் இம்மாதம் 5-ம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்பட்டது; அமைதி நிலவுவதற்கு சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இதுவே சரியான தருணம் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி பேசியது; அண்மையில் நடந்த சார்க் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பாதது; பாகிஸ்தான் பிரதமர் இலங்கை செல்வதற்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது போன்ற பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறலாம் என ரா உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x