Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி

அரசுப் பேருந்துகள் இயங்காததால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நகர்ப் பேருந்துகள் இயக்கப்படும் பகுதியில் நேற்று வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துகள். படம்: ஜெ.ஞானசேகர்

திருச்சி

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத் தப் போராட்டம் காரணமாக பெரும்பா லான அரசுப் பேருந்துகள் இயங் காததால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை இறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத் துக் கழக தொழிற் சங்க கூட்டமைப் பினர் ஏற்கெனவே அறிவித்தவாறு நேற்று வேலைநிறுத்தப் போராட் டத்தை தொடங்கினர். திருச்சி மாவட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, என்என்டியுசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். இதன் காரண மாக திருச்சி மாவட்டத்தில் வழக்கம் போல அரசுப் பேருந்துகள் இயக் கப்படவில்லை. மாநகர மற்றும் புறநகர், விரைவுப் பேருந்துகளில் பெரும்பாலானவை மாவட்டத்தில் உள்ள 14 பணிமனைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல பேருந்துகள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.தனியார் பேருந்துகள் வழக் கம்போல இயக்கப்பட்டன.

போராட்டம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியது: வேலை நிறுத்தத்தில் அண்ணா தொழிற் சங்கத்தினர் உட்பட போக்கு வரத்துக் கழக தொழிற்சங்கத்தி னர் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் 95 சதவீதம் இயங்க வில்லை. எங்களது போராட்டத்தின் நியாயத்தை மக்கள் புரிந்து கொண்டு ஆதரவு அளித்துள்ளனர் என்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

வேலைநிறுத்தப் போராட்டத் தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. போதிய பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “கும்பகோணம் மண்டலத்தில் 425 பேருந்துகள் உள்ளன. இதில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 186 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட காரைக்குடி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நாகை, கும்பகோணம் மண்டலத் தில் சராசரியாக 72.1 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன” என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மண்டலத் துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக் கோட்டை, பொன்னமராவதி, இலுப்பூர், பட்டுக்கோட்டை, திருச்சி ஆகிய அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் இருந்து இயக்கப்படும் 417 புறநகர் மற்றும் நகரப் பேருந்துகளில், போக்குவரத்துத் தொழிலாளர் களின் போராட்டத்தால் 50 பேருந் துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில்...

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 30 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே நேற்று இயங்கின. அரியலூர், ஜெயங் கொண்டம் ஆகிய இரு அரசுப் போக்குவரத்துக் கழக பணி மனையிலிருந்து அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தொழிலா ளர்களை கொண்டு இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் அரசுப் போக்கு வரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்பட்டுவந்த 95 பேருந்து களில் நேற்று காலை 5 பேருந்துகளே இயக்கப்பட்ட நிலையில், பின்னர் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை நேரத்தில் 27 பேருந்துகள் இயக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில்...

நாகை மண்டலத்தில் உள்ள நாகை, திருவாரூர், மயிலாடு துறை, வேதாரண்யம், சீர்காழியில் 11 பணிமனைகளில் இருந்து 521 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று 112 பேருந்துகள் மட்டுமே இயக்கப் பட்டன. நாகை மாவட்டத்தில் இருந்து 217 பேருந்துகள் இயக்கப் பட வேண்டும். ஆனால், 50 பேருந் துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 14 பேருந் துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

பேருந்து நிலையம் மற்றும் பணி மனைகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டத்தில் இயக் கப்பட வேண்டிய 210 பேருந்துகளில் நேற்று 75 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கூடுதலாக பேருந்துகளை இயக்க தற் காலிக ஊழியர்களை நியமித்து நிலைமையை சீர்செய்ய நடவ டிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டத்தில் 100 சதவீத பேருந்துகள் இயக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் மண்டலத்தில் கரூரில் உள்ள இரு கிளைகளில் தலா 67, குளித்தலையில் 41, அரவக்குறிச்சியில் 29, முசிறியில் 54 என 100 சதவீத பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும், வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x