Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM

பிப்.27-ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்

சென்னை

சட்டப்பேரவை கூட்டத்தொடர் காரணமாக பிப்.27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அரசின் இடைக்கால பட்ஜெட்டைதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடரைபிப்.25 (இன்று) முதல் 27-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பேரவையில் 27-ம்தேதி இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை அளிக்கிறார். இதையொட்டி பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் பிப்.27-ம் தேதிசனிக்கிழமை பட்ஜெட் மீதானவிவாதம், சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன. எனவே, 27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x