Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் இன்று முதல் கட்ட பேச்சு நடத்துகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருடன் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மகள் திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. இதனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்திக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT