Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

கடம்பாடி மாரி சின்னம்மன் கோயிலில் மார்ச் 12-ம் தேதி தெப்ப உற்சவம்

செங்கை மாவட்டம், கடம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள மாரி சின்னம்மன் கோயிலில் வரும் மார்ச் 12-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரி சின்னம்மன் கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

இக்கோயிலில், மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமை நாளன்று கோயில் முகப்பில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இதில், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் அம்மனை தரிசனம் செய்து வழிபடுவர். இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் மார்ச் மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x