Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே செருமாவிலங்கையில் பிரசித்திப் பெற்ற சுந்தரம்பாள் அம்பிகை உடனுறை கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்கும் பாலாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தன.
இப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக பூஜை கடந்த பிப்.22-ம் தேதி தொடங்கியது. நேற்று காலையுடன் 4 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்று, காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில், மாவட்ட துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான(கோயில்கள்) எம்.ஆதர்ஷ் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT