Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் போராட்டங்கள் நடத்த வேண்டாம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அதிமுக அரசுக்கு எதிராகப் போராடும் அமைப்புகள், போராட்டங்களை தள்ளி வைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்வெளியிட்ட முகநூல் பதிவு:

அதிமுக அரசு, தேர்தல் காலம்நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒரு புறம் நாடகமாடுகிறது. அதேநேரம் உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்தும் வருகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், கைது நடவடிக்கையை அரசு மேற்கொண்டது கண்டனத்துக்குரியது.

உரிமைப் போராட்டம் நடத்துவோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செவிமடுக்காத அதிமுகஅரசுக்கு எதிரான போராட்டத்தை தள்ளி வையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x