Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை 25 லட்சத்து 32 ஆயிரத்து 742 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்வதற்கான சிறப்பு திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகள் வரன்முறைப்படுத்தப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் தகுதியான நபர்களுக்கு மாற்று வீட்டுமனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கண்டறியப்பட்ட 1 லட்சத்து 36 ஆயிரத்து 481 ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 60,203 வீட்டுமனை பட்டாக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT