Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

10 ஆண்டுகளில் 28 லட்சம் விவசாயிகள் பயன்

தமிழகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் வகையில் 8 சமூக பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் 33 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்த இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்கு ரூ.4,316 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 28 லட்சத்து 58 ஆயிரத்து 92 விவசாயிகளுக்கு ரூ.2,058 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x