Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.22,218 கோடி

தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை காப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ.165 கோடியே 68 லட்சத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தேசியத் தழுவல் நிதியில் இருந்து நிதியுதவி எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை மாநகரின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தை கருத்தில்கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு செல்லும் நீர்வழிகளை தூய்மைப்படுத்தவும், சதுப்பு நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மையை மீட்டெடுக்கவும், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியன ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டம் ரூ.816 கோடியே 80 லட்சத்தில் மேற்கொள்ளப்படும். பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்துக்காக (ஊரகம்) மொத்த தொகையாக ரூ.3,458 கோடியும் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.22,218 கோடியே 58 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x