Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

திருச்சி

காங்கிரஸ் கட்சி பிரமுகர் நெல்லை கண்ணன், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வகித்து வரும் கல்லூரி தொடர்பாக மோசடி புகார் எழுந்துள்ளது. எனவே, கே.எஸ். அழகிரி தானாக முன்வந்து தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, பாஜக பெரிதுபடுத்தி பிரச்சாரம் செய்வார்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்தை தவிர காங்கிரஸ் கட்சியில் வேறு யாரும் தனது சொந்தத் தொகுதியில் நின்று வெற்றி பெறவில்லை. சொந்த தொகுதியில் 20 சதவீத வாக்குகளைக்கூட வாங்க முடியாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x