Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

வாகனம் எரிப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை எதிர்த்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வரும் மார்ச் 1-ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் வாகனங்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மனு வழங்க வந்தனர். அம்மனுவை காவல் துறையினர் வாங்க மறுத்தனர். எனவே அம்மனுவை அஞ்சல் வழியாக காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்காக வெவ்வேறு வகையான போராட்டங்களை மக்கள் நடத்திவரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக நாம் தமிழர் கட்சியினர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்த அனுமதி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x