Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

பிடிவாரண்ட் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் போலீஸாருக்கு திண்டுக்கல் டி.ஐ.ஜி. உத்தரவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிடிவாரண்ட் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய டி.ஐ.ஜி. முத்துச் சாமி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் மாதாந் திர ஆய்வுக் கூட்டம் டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வெள்ளைச்சாமி, இனிகோ திவ்யன், டி.எஸ்.பி.க்கள் கலந்துகொண்டனர். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிடிவாரண்ட் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், தேர்தலில் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வது குறித்தும் டி.ஐ.ஜி. முத்துச்சாமி போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பழநி தைப்பூச விழா பாதுகாப்புப்பணியில் சிறப்பாகச் செயல்பட்ட டி.எஸ்.பி. சிவா உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கி டிஐஜி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x