Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

சிங்கம்புணரி அருகே மதுராபுரியில் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு; 10 பேர் காயம்

சிங்கம்புணரி அருகே மதுராபுரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற இளைஞர்கள்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரியில் உச்சி கருப்பர் கோயில் மாசி படைப்புத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது.

திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் வயல்வெளிகள், மஞ்சுவிரட்டுப் பொட்டலில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டிபோட்டுக் களத்தில் இறங்கினர்.

இதில் பெரும்பாலான காளை கள் பிடிபடாமல் போக்குக் காட்டி தப்பின. ஒரு சில காளைகள் மட்டுமே பிடிபட்டன. பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு பிரான்மலை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டைக் காண சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x