Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

ஓமலூர்- மேச்சேரி இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

சேலம்: ஓமலூர்- மேச்சேரி இடையிலான புதிய ரயில் பாதையில் நாளை (25-ம் தேதி) அதிவேக ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-மேட்டூர் அணை இடையிலான ரயில் பாதையில், ஓமலூர்- மேச்சேரி இடையே புதிதாக 2-வது அகலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், நாளை ஆய்வு செய்கிறார். அப்போது, ஓமலூர்-மேச்சேரி இடையே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அதிவேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, ரயில் பாதையோரம் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ரயில் பாதை மற்றும் பாதையின் அருகே நடமாட வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x