Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

தருமபுரியில் 28-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி

தருமபுரியில் வருகிற 28-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தருமபுரி அரசு கலை கல்லூரியில் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இதில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

இம்முகாமில் கலந்து கொள்பவர்களும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு குறித்த வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப் படஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x