Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதிஆழ்வார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், விலைவாசி உயர்வைக் குறிக்கும் வகையில், சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், நாமம் பூசியும், மோட்டார் சைக்கிளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்றும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, கும்பகோணத்தில் அனைத்து வாகன ஓட்டிகள் சங்கம் சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஹாஜி முகமது, மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x