Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கத்தியை காட்டி மிரட்டி 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீத பானு(47). அரசுப் பள்ளி ஆசிரியை. இவர், தனது 2 மகன்களுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் முகமூடி அணிந்த 5 மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நவநீத பானு அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டதுடன், பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம், எல்.இ.டி டிவி ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்னர், 3 பேரையும் ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதேபோல, அதே கிராமத்தைச் சேர்ந்த கோயில் பூசாரியான வீரபத்திரன்(56) வீட்டுக்குச் சென்ற மர்ம நபர்கள், வீரபத்திரனையும், அவரது மனைவியையும் கத்தியை காட்டி மிரட்டி, ஒரு அறையில் கட்டிப்போட்டு விட்டு அவரது மனைவி அணிந்திருந்த 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x