Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை

திருச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் 33 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ரூ. 1,00,74,528 ரொக்கம், தங்கம் 2 கிலோ 533 கிராம், வெள்ளி 3 கிலோ 784 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 86 இருந்தன.

உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர்கள் மாரியப்பன் (திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்), ஞானசேகர் (உறையூர் வெக்காளியம்மன் கோயில்), கோயில் மேலாளர் ம.லட்சுமணன், அறநிலையத்துறை ஆய்வர் கு.தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதற்கு முன்னதாக பிப். 16-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x